Saturday, 27 September 2025

ஓன்னம்மாள் பூக்கூடைச் சிந்து

பூக்கூடைச் சிந்து

கொல்லம் பரும்பு நகர் வாசன்---தமிழ்
மேவும் பிச்சையா தாசன்--வாழுங்
குலமெச்சிய தேனிற்கவி அரசன்
அதனைப் பாட வழியிற்கூட
பூவாம் கூடை சுமக்க ஒன்னு
யாவும் கூட ஈவும் ஒன்னு.

அட்டி தொட்டய்யன் மனைவி--குல
அனுப்பர் வணங்குந் தேவி---
வரமே தரு கொல்லா புரி
இலந்தைக் கோட்டைத் தாயி
குலம் வாழத் துணை நீயே
வலம் வந்தோம் உந்தன் குடியே.

சின்னஞ் சிறுமிகள் உனது --உன்னை
வேண்டியே சுமந்தார் மனது--அனுப்பர்
சுகமே தரு நலமே அருள் அம்மா
வரமே பெற குலமே நலம்
உறவே நீ யெனத் தொழுதோம்
பூக் கூடை சுமந்தோம் அம்மா.

கல்லும் முள்ளும் காட்டுப் பாதை--உன்னை
உள்ள முள்ளும் விலகும்.
அரவம் அஞ்சி முன்னே வணங்கும்
நிலவும் வழியாய் ஒளிரும்
உலவும் மக்கள் துணையாகும்.

கம்மாக் கரையில் அம்மா--அவள்
நம்மாள் வணங்கும் தெவ்வு.--மற்றோர்
சும்மா சோதனை அஞ்சும்
குலமே நலமே கும்பிடப் பலமே
அனுப்பர் வாழ்வே அவளே
அரியின் தேவி ஒன்னு.

பௌர்ணமி நாளே சௌபாக்யமே--அவள்
அவதார ஒன்னுத் தாயி--அவள்
அரியின் திருமதி தேவி-தேவ
உறுமிச் சத்தம் சிறப்பு--இந்த
சிறுமியர் சுமையவள் பொறுப்பு
அறிவாளவளே அனுப்யர் விருப்பு.

எத்தனை தூரம் கடந்தோம்--இன்னும்
மொத்த பாரமும் சுமந்தோம்--அனுப்பர்
சுமையைப் பெற்று அருள்வாள்
கனமே தாங்கும் குணமே ஒன்னு
மனமே ஏங்கும் நமக்காய் தேவி
தனமே தந்தும் காப்பாள் தாயி

அரிதான் அய்யன் தொட்டன்--அவர்
துணைதான் தாயார் ஒன்னு--அனுப்பர்
குலமே காக்க நலமே அருள
இனமாய் அனுப்பராய் பிறந்தர்.
ஆவுகள் மேய்த்த அட்டி தொட்டன்
காவலனாக குடிகள் ஆண்டார். 

இழுக்கிலா குலத்தின் விழுமமறியா---
துலுக்க அரசன் தொடுவானோ--எம்
குலப் பெண்ணை அடைவ தவனோ
அம்மா தாசன் அடியான் மீட்டான்
எம்குலப் பெருமை ஏந்திக் காத்தான்
எப்பெண்ணும் மணக்க லுற்றான்

கோவிலை அடைந்தோம் கூடை இறக்க-அங்கு
ஆவினை அழைக்க அடர்வனம் ஏக-இங்கு
பூக்கூடை சுமந்தோர் பூந்தளிர் தேற
நோக்குடை அனுப்பர் வாக்கது கேக்க
வாக்குடை ஒன்னு வாசலில் காக்க
மாப்படை அனுப்பர் மனத்துயர் நீ க்க.

தாயரம்மா ஒன்னு சேயோர் நாம்அனுப்பர்--ஆயோர் 
குலம் காப்பாள் அவளே நமது காப்பு.
பூக்கூடை இறக்கு வாக்களித்தாள் நமக்கு
ஓன்றுகூடி வாங்க கையேந்து வோங்க
இல்லையின்னு மறுத்து ஏன்றும் சொல்ல மாட்டாள்.
எல்லை நின்று காப்பாள் தொல்லை இல்லை நமக்கு.

கவிஞர். கொ.. பெ. பிச்சையா.




























No comments:

Post a Comment