Thursday, 6 November 2025

ஓன்னம்மாள் பூக்கூடைச் சிந்து

பூக்கூடைச் சிந்து

கொல்லம் பரும்பு நகர் வாசன்---தமிழ்
மேவும் பிச்சையா தாசன்--வாழுங்
குலமெச்சிய தேனிற்கவி அரசன்
அதனைப் பாட வழியிற்கூட
பூவாம் கூடை சுமக்க ஒன்னு
யாவும் கூட ஈவும் ஒன்னு.

அட்டி தொட்டய்யன் மனைவி--குல
அனுப்பர் வணங்குந் தேவி---
வரமே தரு கொல்லா புரி
இலந்தைக் கோட்டைத் தாயி
குலம் வாழத் துணை நீயே
வலம் வந்தோம் உந்தன் குடியே.

சின்னஞ் சிறுமிகள் உனது --உன்னை
வேண்டியே சுமந்தார் மனது--அனுப்பர்
சுகமே தரு நலமே அருள் அம்மா
வரமே பெற குலமே நலம்
உறவே நீ யெனத் தொழுதோம்
பூக் கூடை சுமந்தோம் அம்மா.

கல்லும் முள்ளும் காட்டுப் பாதை--உன்னை
உள்ள முள்ளும் விலகும்.
அரவம் அஞ்சி முன்னே வணங்கும்
நிலவும் வழியாய் ஒளிரும்
உலவும் மக்கள் துணையாகும்.

கம்மாக் கரையில் அம்மா--அவள்
நம்மாள் வணங்கும் தெவ்வு.--மற்றோர்
சும்மா சோதனை அஞ்சும்
குலமே நலமே கும்பிடப் பலமே
அனுப்பர் வாழ்வே அவளே
அரியின் தேவி ஒன்னு.

பௌர்ணமி நாளே சௌபாக்யமே--அவள்
அவதார ஒன்னுத் தாயி--அவள்
அரியின் திருமதி தேவி-தேவ
உறுமிச் சத்தம் சிறப்பு--இந்த
சிறுமியர் சுமையவள் பொறுப்பு
அறிவாளவளே அனுப்யர் விருப்பு.

எத்தனை தூரம் கடந்தோம்--இன்னும்
மொத்த பாரமும் சுமந்தோம்--அனுப்பர்
சுமையைப் பெற்று அருள்வாள்
கனமே தாங்கும் குணமே ஒன்னு
மனமே ஏங்கும் நமக்காய் தேவி
தனமே தந்தும் காப்பாள் தாயி

அரிதான் அய்யன் தொட்டன்--அவர்
துணைதான் தாயார் ஒன்னு--அனுப்பர்
குலமே காக்க நலமே அருள
இனமாய் அனுப்பராய் பிறந்தர்.
ஆவுகள் மேய்த்த அட்டி தொட்டன்
காவலனாக குடிகள் ஆண்டார். 

இழுக்கிலா குலத்தின் விழுமமறியா---
துலுக்க அரசன் தொடுவானோ--எம்
குலப் பெண்ணை அடைவ தவனோ
அம்மா தாசன் அடியான் மீட்டான்
எம்குலப் பெருமை ஏந்திக் காத்தான்
எப்பெண்ணும் மணக்க லுற்றான்

கோவிலை அடைந்தோம் கூடை இறக்க-அங்கு
ஆவினை அழைக்க அடர்வனம் ஏக-இங்கு
பூக்கூடை சுமந்தோர் பூந்தளிர் தேற
நோக்குடை அனுப்பர் வாக்கது கேக்க
வாக்குடை ஒன்னு வாசலில் காக்க
மாப்படை அனுப்பர் மனத்துயர் நீ க்க.

தாயரம்மா ஒன்னு சேயோர் நாம்அனுப்பர்--ஆயோர் 
குலம் காப்பாள் அவளே நமது காப்பு.
பூக்கூடை இறக்கு வாக்களித்தாள் நமக்கு
ஓன்றுகூடி வாங்க கையேந்து வோங்க
இல்லையின்னு மறுத்து ஏன்றும் சொல்ல மாட்டாள்.
எல்லை நின்று காப்பாள் தொல்லை இல்லை நமக்கு.

கவிஞர். கொ.. பெ. பிச்சையா.