கொல்லம் பரும்பு நகர் வாசன்---தமிழ்
மேவும் பிச்சையா தாசன்--வாழுங்
குலமெச்சிய தேனிற்கவி அதனைப் பாட
அதனைப் பாட வழியிற் கூட
கவியில் புனை தீரன்
உன் படை மாறன்
அட்டி தொட்டய்யன் மனைவி--குல
அனுப்பர் வணங்குந் தேவி---சேம
வரமே தரு கொல்லாபுரி இலந்தைக் கோட்டை
குலம் வாழத் துணை நீயே
வலம் வந்தோம் உந்தன் குடியே.
சின்னஞ் சிறுமிகள் உன்னை --வரம்
வேண்டிச் சுமந்தனர் கூடை--அனுப்பர்
சுகமே தரு நலமே அருள் அம்மா
வரமே பெற குலமே நலம்
உறவே நீ யெனத் தொழுதோம்
பூக் கூடை சுமந்தோம் அம்மா.
கல்லும் முள்ளும் காட்டுப் பாதை--உன்னை
எண்ண முள்ளும் விலகும்.
அரவம் அஞ்சி முன்னே வணங்கும்
நிலவும் வழியாய் ஒளிரும்
உலவும் மக்கள் நிலவும்
துணையாகும்.
கம்மாக் கரையில் அம்மா--அவள்
நம்மாள் வணங்கும் தெவ்வு.--மற்றோர்
சும்மா சோதனை அஞ்சும்
குலமே நலமே கும்பிடப் பலமே
அனுப்பர் வாழ்வே அவளே
அரியின் தேவி ஒன்னு.
பௌர்ணமி நாளே சுகமே--அவள்
அவதார ஒன்னு அகமே--அவள்
அரியின் திருமதி தேவி
உறுமிச் சத்தம் சிறக்கும் சித்தம்
சிறுமியர் சுமையவள் பொறுப்பு
அறிவாளவளே அனுப்பர் விருப்பு.
எத்தனை தூரம் கடந்தோம்--இன்னும்
மொத்த பாரமும் சுமந்தோம்--அனுப்பர்
சுமையைப் பெற்று அருள்வாள்
கனமே தாங்கும் குணமே ஒன்னு
மனமே ஏங்கும் நமக்காய் தேவி
தனமே தந்தும் காப்பாள் தாயி
அரிதான் அய்யன் தொட்டன்--அவர்
துணைதான் தாயார் ஒன்னு--அனுப்பர்
குலமே காக்க நலமே அருள
இனமாய் அனுப்பராய் பிறந்தர்.
ஆவுகள் மேய்த்த அட்டி தொட்டன்
காவலனாக குடிகள் ஆண்டார்.
இழுக்கிலா குலத்தின் விழுமம்---அறியா
துலுக்க ரரசன் தொடுவனோ--எம்
குலப் பெண்ணையும் அடைவனோ
அம்மா தாசன் அடியான் மீட்டான்
எம்குலப் பெருமை ஏந்திக் காத்தான்
எக்கிளைப் பெண்ணும்
மணக்க லுற்றான்
உனது கோவிலை அடைந்தோம் -அங்கு
பூக்கூடை இறக்கியும் வைத்தோம்-பால்
பொங்கலும் பொங்கப் புதுப்பானை
புதுநெல்லும் பொங்கிப் பொங்கும்
நோக்குடை அனுப்பருன் வாக்கும் கேக்க
வாக்குடை ஒன்னுன் வாசலில் காக்க.
தாயாரம்மா ஒன்னுன் சேயோர் -ஆயோர்
குலம் காப்பாள் அவளே காப்பு.--வாசப்
பூக்கூடை இறக்க வாக்களித்தாள்--அனுப்பர்
ஓன்று கூடி வணங்க வாக்குக்காகச் சுணங்க
எல்லை நின்று பார்ப்ப்பாள்
தொல்லை நீக்கிக் காப்பாள்.
கவிஞர். கொ.. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment