ஸ்ரீ ஒன்னம்மாள் சபதம்.
Saturday, 27 September 2025
ஓன்னம்மாள் பூக்கூடைச் சிந்து
ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம்.(நூற்று எட்டு வரிகள்)
Sunday, 12 January 2025
அப்பா உன் தியாகத்தை
Saturday, 11 January 2025
ஒன்னம்மாள் மந்திரம்.108வரிகள்.
Wednesday, 8 January 2025
ஒன்னு தொட்டய்யன் வாழ்த்து.
ஒன்னு தொட்டய்யன்.
ஒன்னு தொட்டய்யன் வாழ்த்து.
அம்மா ஒன்னுத் தாயம்மா!
அய்யா தொட்டன் துணையம்மா!
உழைக்கும் குலத்தின் தேவியே!
பிழைக்கும் வழியும் செய்யுமே!
ஆயர் பாடித் தெய்வமே!
அழைத்துத் துதியும் செய்வோமே!
ஆவாய் எம்மைக் காத்துமே!
அருள வேண்டும் தீர்க்கமே!
கொல்லம் பரும்பு தேவியே!
கோவில் கொண்ட தேவதையே!
கம்மாக் கரையதன் மேலேயே!
காட்சி தருகின்ற தீமகளே!
இலந்தை முள்ளுக் கோட்டையே!
எழுப்பக் கேட்ட காவிரியே!,
வளரும் தமிழிந்த நாட்டையே
வாழ்விப்பாய் அம்மா வாழ்கவே!.
புல்லாங் குழலையும் ஊதுவாய்!
புதுப்புனல் நீயும் ஆக்குவாய்!
குடகு மலையின் கொடைமகளே
நடை பயின்றுவா காவிரியே!
நெருப்பில் பிறந்த தேவியே!
நீதி காக்குங் கோவியே!
வாடும் பயிரும் விளையவே
ஓடி வருவாய் காவிரியே!
உறுமிமேளம் தாளம் கொட்டி,
உனதுபுகழே கானங் கட்டி
உருக நாளும் கெஞ்சுகிறோம்.
வருக அருள்க ஒன்னம்மா!
பாட்டாளி குலமிங்கு என்னாளும்
பசிவலி மறந்து வாழனும்.
கூட்டாக் கூடி ஒற்றுமையாய்
குலம்எம்மை தழைக்க வைத்திடுவாய்!.
அனுப்பர் எல்லாம் கூடுவோம்.
அம்மா அவளைப் பாடுவோம்.
அன்னை நீயே காவிரியே
அனுப்பர் குலத்தின் காவலே.
கொ.பெ.பி.அய்யா.
Saturday, 6 June 2020
தலைமுறை நேத்திரமே!
தமிழ் மகள் நேத்திராவே--புது
தலை முறை நேத்திரமே--கனி
உதிர்காலம் பின்னாலே--ஏழை
எதிர்காலம் உன்னாலே.
பாடு பட்ட கோடியதும்--நீ
தேடுங் கல்வி நாடியதும்--நெஞ்சம்
மூடித் தானே ஈந்தாயோ--மகளே
வாடும் வயிறு ஆய்ந்தாயோ!
கோடி கோடி சேர்த்தாலும்--பத்து
மாடி கூடி வாழ்ந்தாலும்--வேறு
பெருமை உண்டோ பிறந்ததில்--ஏழை
திருமை கண்டாய் நிறைந்ததில்.
மதுரை கண்ட பெருமையாம்-கொரனா
எதிர்க்க நின்ற சிறுமியாம்--பல
இலட்சம் என்ன நிச்சயம்--கருணை
உச்சம் கொண்டாய் இலட்சியம்.
முடி திருத்தும் தொழிலாளி--மனிதம்
படி உயர்த்தும் முதலாளி--நல்ல
தந்தை மோகன் பேராள--உந்தன்
சிந்தை தாகம் தமிழ்கூறும்.
தமிழாள பிறந்த நீ--உயர்
தமிழர்கு அமுதம் நீ--காலம்
ஏங்குகிற வாழ்வு நீ--புகழ்
ஓங்கிநீள வாழ்க நீ.
(பொருள்:-நேத்திரம் --கண்)
கொ.பெ.பி.அய்யா.
Wednesday, 3 June 2020
மாலையம்மாள் துதி.
மாலையம்மாள் துதி
மேலக் கல்லூரணி,
வாழுந் தெய்வம்,
இகடோர் வம்சம் தேவியே!
சரணம் தாயே :
மாலையம்மா.
போற்றி போற்றி.
கவுண்டன் பட்டி,
கவுண்டர் குலத்தின்,
மகளே தாயே இகடோளே!
சரணம் தாயே
மாலையம்மா;
போற்றி போற்றி.
மாமன் உயிரில்,
தாமெனக் கலந்த,
சேமமனுப்பர் புகழே! பெருவே!
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
அனுப்பர் தெய்வம்,
ஒன்னம்மா பக்தை.
அவள்வழிக் கற்புக் கரசியே
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
வீர பைய்யி ,
சின்னு பைய்யி,
ஓருருவான சக்தியின் வடிவே!
சரணம் தாயே ;
மாலையம்மா
போற்றி போற்றி.
அக்கினித் தேவி,
சக்தியின் கோவி;
முக்தியருளே பக்தர் புலனே!
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
கற்பின் தெய்வம்,
கண்ணகி அம்சம்,
பொற்பதம் உனது தஞ்சமே!
சரணம் தாயே;
மாலையம்மா:
போற்றி போற்றி.
அனுப்பர் நலமே,
அணையா விளக்கே,
வினைதீர் ஒளியே நம்பகமே!
சரணம் தாயே;
மாலையம்மா:
போற்றி போற்றி.
வளையல் வணிகர்,
வாய் மொழி பேசி,
வளையல் படைத்த வரலாறே!
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
கம்மங் காடு,
காவல் காத்து,
கள்வனை விரட்டிய அரணே!
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
வைகாசி விசாகம்,
சிவ மகன் திருநாள்,
வைகுண்ட வாசம் மேவினை நீ!
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
விசாக நாளில்,
வருசமும் விழாவில்,
குருபூசைத் திருநாள் புண்ணியமே!
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
சோம வாரம்,
கோமள வல்லி
பூமி மலர்ந்த வாசுகி நீயே:
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
திங்கள் தினத்தில்,
மங்கையர் பிறப்பின்,
மங்கள நிகழ்வின் மலர்ப்பூசை:
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
அனுப்பர் வம்சம்,
இனப்புகழ் அம்சம்,
கனப்பெரும் திருவே அருளே!
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
அனுப்பர் நாடும்,
ஆலயம் கூடும்,
இனப்பெரும் பெருமை திருவேநீ:
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
சரணம் சரணம்,
சர்வம் சரணம்,
வரமும் அருளும் கருணைநீ:
சரணம் தாயே ;
மாலையம்மா:
போற்றி போற்றி.
கொ.பெ.பி.அய்யா.