Saturday, 27 September 2025

ஓன்னம்மாள் பூக்கூடைச் சிந்து

பூக்கூடைச் சிந்து

கொல்லம் பரும்பு நகர் வாசன்---தமிழ்
மேவும் பிச்சையா தாசன்--வாழுங்
குலமெச்சிய தேனிற்கவி அரசன்
அதனைப் பாட வழியிற்கூட
பூவாம் கூடை சுமக்க ஒன்னு
யாவும் கூட ஈவும் ஒன்னு.

அட்டி தொட்டய்யன் மனைவி--குல
அனுப்பர் வணங்குந் தேவி---
வரமே தரு கொல்லா புரி
இலந்தைக் கோட்டைத் தாயி
குலம் வாழத் துணை நீயே
வலம் வந்தோம் உந்தன் குடியே.

சின்னஞ் சிறுமிகள் உனது --உன்னை
வேண்டியே சுமந்தார் மனது--அனுப்பர்
சுகமே தரு நலமே அருள் அம்மா
வரமே பெற குலமே நலம்
உறவே நீ யெனத் தொழுதோம்
பூக் கூடை சுமந்தோம் அம்மா.

கல்லும் முள்ளும் காட்டுப் பாதை--உன்னை
உள்ள முள்ளும் விலகும்.
அரவம் அஞ்சி முன்னே வணங்கும்
நிலவும் வழியாய் ஒளிரும்
உலவும் மக்கள் துணையாகும்.

கம்மாக் கரையில் அம்மா--அவள்
நம்மாள் வணங்கும் தெவ்வு.--மற்றோர்
சும்மா சோதனை அஞ்சும்
குலமே நலமே கும்பிடப் பலமே
அனுப்பர் வாழ்வே அவளே
அரியின் தேவி ஒன்னு.

பௌர்ணமி நாளே சௌபாக்யமே--அவள்
அவதார ஒன்னுத் தாயி--அவள்
அரியின் திருமதி தேவி-தேவ
உறுமிச் சத்தம் சிறப்பு--இந்த
சிறுமியர் சுமையவள் பொறுப்பு
அறிவாளவளே அனுப்யர் விருப்பு.

எத்தனை தூரம் கடந்தோம்--இன்னும்
மொத்த பாரமும் சுமந்தோம்--அனுப்பர்
சுமையைப் பெற்று அருள்வாள்
கனமே தாங்கும் குணமே ஒன்னு
மனமே ஏங்கும் நமக்காய் தேவி
தனமே தந்தும் காப்பாள் தாயி

அரிதான் அய்யன் தொட்டன்--அவர்
துணைதான் தாயார் ஒன்னு--அனுப்பர்
குலமே காக்க நலமே அருள
இனமாய் அனுப்பராய் பிறந்தர்.
ஆவுகள் மேய்த்த அட்டி தொட்டன்
காவலனாக குடிகள் ஆண்டார். 

இழுக்கிலா குலத்தின் விழுமமறியா---
துலுக்க அரசன் தொடுவானோ--எம்
குலப் பெண்ணை அடைவ தவனோ
அம்மா தாசன் அடியான் மீட்டான்
எம்குலப் பெருமை ஏந்திக் காத்தான்
எப்பெண்ணும் மணக்க லுற்றான்

கோவிலை அடைந்தோம் கூடை இறக்க-அங்கு
ஆவினை அழைக்க அடர்வனம் ஏக-இங்கு
பூக்கூடை சுமந்தோர் பூந்தளிர் தேற
நோக்குடை அனுப்பர் வாக்கது கேக்க
வாக்குடை ஒன்னு வாசலில் காக்க
மாப்படை அனுப்பர் மனத்துயர் நீ க்க.

தாயரம்மா ஒன்னு சேயோர் நாம்அனுப்பர்--ஆயோர் 
குலம் காப்பாள் அவளே நமது காப்பு.
பூக்கூடை இறக்கு வாக்களித்தாள் நமக்கு
ஓன்றுகூடி வாங்க கையேந்து வோங்க
இல்லையின்னு மறுத்து ஏன்றும் சொல்ல மாட்டாள்.
எல்லை நின்று காப்பாள் தொல்லை இல்லை நமக்கு.

கவிஞர். கொ.. பெ. பிச்சையா.




























ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம்.(நூற்று எட்டு வரிகள்)

ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம்
.(நூற்று எட்டு வரிகள்)

1)இமயம் பிளந்து எழுதீ பிறந்தாய்
உமையாள் மகளே ஒன்னம்மாள்.
அமையும் உலகின் அனுப்பர் முதல்வி
இமையாய்க் காவல் ஒன்னம்மாள்.

2)கங்கை யமுனை கரைகள் ஆண்டு
தங்கம் அறிந்த ஒன்னம்மாள்.
துங்கம் பரவி எங்கும் உலவும்
சிங்கத் தலைவி ஒன்னம்மாள்.

3)வீரம் விதைத்து தீரம் வளர்த்து
விந்தியம் தாண்டிய ஒன்னம்மாள்
ஆரம் படைத்து அனுப்பனை மணந்து
ஆட்சி அமைத்தாய் ஒன்னம்மாள்.

4)அட்டிய தொட்டன் அய்யன் மனையாள்
அம்மா அரசியே ஒன்னம்மாள்.
பற்றிய பலுத்தன் பகையினை வென்று
பாவையை மீட்டாய் ஒன்னம்மாள்.

5)சோளியோர் வம்சம் சுடர்கொடி ஆண்டாள்
மாலவி அம்சம் ஒன்னம்மாள்.
ஆயர்பாடி அனுப்பரின் கூட்டம்
தாயார் நீயே ஒன்னம்மாள்.

6)முள்ளால் கோட்டை பெல்லார் நாட்டை
சொல்லால் ஏற்றிய ஒன்னம்மாள்.
வல்லான் காட்டிய நல்லார் பாட்டை
கொள்ளோர் போற்றிய ஒன்னம்மாள்.

7)கன்னடம் கடந்தும் பன்நிலம் பரந்தும்
தென்நிலம் உறைந்தாய் ஒன்னம்மாள் .
கொண்டிடம் தமிழும் மன்றிடம் நிறைந்தும்
நின்றிடம் நிலைத்தாய் ஒன்னம்மாள்.

8)பகவான் அருளும் இகம்பெற பொருளும்
தகவாய் பெருக்கிய ஒன்னம்மாள்.
அகமும் புறமும் அன்பே உருக்கும்
மகிமைத் திறமும் ஒன்னம்மாள்.

9)செந்நிறக் குருதி தண்ணீராய் ஓடிய
பெண்ணாறு கண்டாய் ஒன்னம்மாள்.
தன்னறம் கொண்டும் பொன்கரம் மொண்டும்
உண்ணிறம் தந்தாய் ஒன்னம்மாள்.

10)வியந்தான் மன்னன் விசயபுரத்தான்
நயந்தான் சொல்லில் ஒன்னம்மாள்.
உயர்ந்தான் தோளன் தொட்டன் அவர்க்கு
முயன்றாய் ஆட்சி ஒன்னம்மாள்.

11)ஆநிரை மேய்த்து அட்டிகள் பெருக்கினர்
தானிறை அனுப்பர் ஒன்னம்மாள்.
வானிறை வையம் வல்லமை முறுக்கவும்
மேநிறை கொடுத்தாய் ஒன்னம்மாள்.

12)அடையா மழையால் அணைகள் உடைய
படையாய் அடைத்தாய் ஒன்னம்மாள்.
கொடையாய் நாட்டைக் கொடுத்தான் மன்னன்
விடையாய் விபூதி ஒன்னம்மாள்.

13)நாடெங்கும் நல்ல மழையும் பெய்ய
நல்வரவு கொள்ள ஒன்னம்மாள்.
காடெங்கும் கானம் அலையும் செய்ய
வீடெங்கும் வாழ்வே ஒன்னம்மாள்.

14)நல்லார் நன்மை பேரும் பெற்றாய்
பொல்லார் புகைய ஒன்னம்மாள்.
கொள்ளார் உண்மை கொற்றம் முன்னே
தில்லார் நிறுவினை  ஒன்னம்மாள்.

15)அதிகாரம் பெற்றார் அனுப்பர் எல்லாம்
கதியாவும் தந்தாய் ஒன்னம்மாள்.
சதிமோசம் செய்தான் சண்டாளன் மல்லன்
விதிதோசம் ஏற்றாய் ஒன்னம்மாள்;

16)சத்திய வழியில் லட்சியப் பணியில்
நித்தியம் வாழ்ந்தாய் ஒன்னம்மாள்
உத்தம நெறியில் நிச்சயத் துணிவில்
பற்றினை நெருப்பை ஒன்னம்மாள்.

17)வேல மரங்கள் நாலா புறங்கள்
வீழவும் முழங்கினை ஒன்னம்மாள்.
சூழத் தீயதில் ஞாலம் அதிரவே
சூளுரை செய்தாய் ஒன்னம்மாள்.

18)மேகம் கூடி சோகம் முழங்க
வேகம் சிவந்தாய் ஒன்னம்மாள்.
யாகம் இதுதான் பாகம் வழங்க
தேகம் துணிந்தாய் ஒன்னம்மாள்.

19)வானவர் பதைக்க ஏனென விளக்க
கோனவன் துடிக்க ஒன்னம்மாள்.
மானம் பெரிதென வாழ்பவர் அனுப்பர்
வீணிலை சபதம் ஒன்னம்மாள்.

20)சத்தியம் காக்கும் உத்தமர் அனுப்பர்
நிச்சயம் செய்தாய் ஒன்னம்மாள்.
குற்றங்கள் செய்யா குலமென்று அனுப்பர்
பெற்றினைத் தந்தாய் ஒன்னம்மாள்.

21) புதல்வன் பொட்டியன் பொறுப்பினை பெற்றதும்
முதல்வன் அட்டியனுடன் ஒன்னம்மாள்.
தகதக நெருப்பின் தங்கக் குதிரையில்
சுகமாய் அமர்ந்தாய் ஒன்னம்மாள்.

22)அக்கினிக் கருவில் அவதாரம் ஆகினை
அக்கினிப் பிறவி ஒன்னம்மாள்.
இக்குலம் அனுப்பர் நற்குலம் ஆக்கினை
மற்பலம் உரக்க ஒன்னம்மாள்.

23)உறுமி முழக்கம் பெருகி முழக்க
புரவி பறக்க ஒன்னம்மாள் .
வானம் தொடவும் வளரும் நெருப்பில்
வலம்வரும் தாயே ஒன்னம்மாள்.

24)வானோர் பூமழை வாரியும் இறைக்க
தானுடல் தவிர்த்த ஒன்னம்மாள்.
மாயோன் அவனே மன்னவன் தொட்டன்
நாயகி பறந்தாய் ஒன்னம்மாள்.

25)தொட்டன் இராயன் பட்டம் விளங்க
பெற்றனை ஆணை ஒன்னம்மாள்.
அனுப்பர் என்றால் அடையாளம் உறுமி
தனிப்புகழ் அருளினை ஒன்னம்மாள்.

26)கிளைகள் வகுத்து தழைகள் தொகுத்து
உறவுகள் இணைத்தாய் ஒன்னம்மாள்.
வரங்கள் வழங்கி வாக்கும் விளங்க
அறங்கள் அருளினை ஒன்னம்மாள்.

27)பரந்து வாழ்ந்தும் மரபு நிறைந்தும்
அறியும் தெய்வம் ஒன்னம்மாள்.
அனுப்பர் குலத்தின் ஆதாரம் அறிந்தும்
இணைக்கும் பலமே ஒன்னம்மாள்.
----------'----'''''''-------------'--''''"''"''''----------------
ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம் (பாகம் இரண்டு)

ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!
ஆதி முதலாய் நீதி செய்த
அம்மா அனுப்பாள் ஒன்னம்மாள்.
மேதினில் ஆதியாய் வேதியம் கண்ட
மேலான குலத்தாள் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

வாழும் ஒழுக்கம் ஆளும் வழக்கம்
ஞாலம் பழக்கிய ஒன்னம்மாள்.
குடும்பம் கூட்டம் ஊரும் நாடும்
குலமுறை அமைத்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

சத்திய வாக்கு உத்தமம் ஆக்கும்
பத்தினித் தெய்வம் ஒன்னம்மாள்.
தொட்டது துலக்கும் இட்டது விளங்கும்
உத்தமித் தாயே ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

அனுப்பர் என்றால் அறவோர் என்பார்
மனுகுலம் கண்டாய் ஒன்னம்மாள்.
அறம்பாடி என்பார் ஆக்கினை பெற்றார்
திறம்தேடி தந்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
அனுப்பர் வாழும் அவனி எங்கும்
அமைதி நிலைக்க ஒன்னம்மாள்.
வளமும் வளர்ச்சியும் வல்லமை பயிற்சியும்
நலமும் எல்லாம் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.

கொ.பெ.பி.அய்யா.

மந்திரமாய் இசைத்துப் பாட குல ஒற்றுமை
நன்மை உண்டாகும்..

கருத்து வரவேற்கப்படுகிறது.